Dec 28, 2009

கள்ளமிலா செல்லங்களே

சல சலவென ஓடும் நதியினிசை ஓசை போல்

கல கலவென சிரித்தாடும் கள்ளமிலா செல்லங்களே

காலை மாலை கடவுளை வணங்கிடுவீர்

காலமெல்லாம் இறையருள் உணர்ந்திடுவீர்

ஆடி வரும் தேருனக்கு அன்னை உண வூட்டுவார்

ஓடியாடி விளையாடி உடல் நலம் பேணிடுவீர்

கற்பவை காலத்தில் கற்றிடுவீர்

கற்றதை பயனுற செயல்படுவீர்

ஈன்ற தாய் தந்தை சொல் கேட்டிடுவீர்

சான்றோன் எனப் புகழ் பெற்றிடுவீர்

ஆசான் பெரியோர் பணிந்திடுவீர், அவர்

ஆசியுடன் நலன் பல பெற்றிடுவீர்

நல்லது நினைத்து நல்லது சொல்லிடுவீர்

நல்லதே செய்து நாளும் வளர்ந்திடுவீர்

இத்தகு செல்லங்கள் இருக்கையிலே

எத்தகு சிறப்புறும் தாய்நாடே.

(நாகை வை. ராமஸ்வாமி)


--
V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி)
http:/nampakkam.blogspot.com

No comments:

Post a Comment